உற்பத்திச் செலவு சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக, முட்டை உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, தற்போதைய நிலவரப்படி முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 32 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்சமயம் பண்ணைகளில் இருந்து முட்டை ஒன்று 27 முதல் 28 ரூபா வரையிலான மொத்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள் தங்களது பண்ணைகளைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
