அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு 50% மேலதிக வரியை விதித்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. வாகனங்களின் மொடல்களுக்கு ஏற்ப 15 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரை விலை உயர்வு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி கூறுகையில்,
டொலர், யென் மற்றும் பவுண்ட் போன்ற வெளிநாட்டு நாணய மாற்று வீத உயர்வு மற்றும் 2.5% சமூகப் பாதுகாப்பு வரி அதிகரிப்பு ஆகியவற்றுடன் இந்த 50% புதிய வரியும் சேர்ந்துள்ளதால், இந்த ஒட்டுமொத்த வரிச்சுமையையும் நுகர்வோர் மீதே சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
