மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எஸ் புஷ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைய நேற்று(21) திடீரென வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
இதன் போது பாவனைக்கு உதவாத 12 பேருந்துகள் 07 வேன்கள் 06 பார ஊர்திகள் 02 மோட்டார் சைக்கிள்கள் 02 கெப்ரக வாகனங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை ஒரு மாத காலத்திற்குள் திருத்தம் செய்து நுவரெலியா மாவட்ட வாகன போக்குவரத்து துறை அதிகாரி எம்,ஜீ’ சி, பண்டாரவிடம் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
