நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
