நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நேற்று (29 ) வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடபுசல்லாவை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்,
நீதிமன்றத்தின் தீர்பைத் தொடர்ந்து, கைதியை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சு மருந்தை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்துள்ளார்.
இதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசார் இணைந்து அவரை உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
