தெல்தோட்டை பிரதேசத்தில் ‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு பஹத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், முதற்கட்ட உதவியாக தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் நிலூகா புலத்கே, தெல்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி துஷாரி கெதரக்கும்புர மற்றும் பாதஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் திருமதி சாகரிகா தில்ஹானி உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
