எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து கட்டணங்களில் இடைக்கால திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஆண்டுதோறும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் வழக்கமான பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
