காலி – தல்பே கடற்கரைப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர் குருணாகல் – மல்லவபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த போதே அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில் , இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸாரால் முன்னெடுத்து வருகின்றனர்.
