தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் “பெரிய பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதை தவிர்த்து விட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் அன்னதானம் வழங்குதல், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், வேட்டி சேலை வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை த.வெ.க தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது சர்வேஸ் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு புடவைகள் வழங்கியும் மரக்கன்றுகளை கொடுத்தும் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசீல்களையும் அமைச்சர் சர்வேஸ் வழங்கி வைத்தார்.
