பொலன்னறுவை – மஹவெவ பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபரொருவர் மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மஹவெவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
மரம் ஒன்றை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போதே எதிர்பாராதவிதமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மனம்பிட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
