இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையின் (Heatwave) காரணமாக, அந்த நாட்டின் தென்னிந்தியப் பகுதியில் 16 பேர் கடுமையான வெப்பம் சார்ந்த பல்வேறு நோய் பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தெலுங்கானா மாநிலம் முழுவதும் தற்போது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
