பொத்துவில் – பாணம வீதியின் பசரச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் விபத்து நேற்று வெள்ளிக்கிழழை (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவனும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் படுகாயமடைந்துள்ளனர்.
இருவரையும் உடனடியாகப் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடையவர் ஆவார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைது செய்துள்ள பொத்துவில் பொலிஸார், விபத்துக்கான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
