பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (08) திங்கட்கிழமை முற்பகல் 10:30 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதனால், கடலில் பயணம் செய்வோரும் மற்றும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரும் வரை மேற்படி கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
