ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது எம்புல்கம நோக்கி பயணித்த கார் ஒன்று மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த பெண்கள் இருவரும் நவகமுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ரனால மற்றும் கிராந்துருகோட்டே பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், தப்பியோடிய ஓட்டுநரையும் கைது செய்துள்ளனர். விபத்தின் போது ஓட்டுநர் மது அருந்தியிருந்தமை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
