பிலிபைன்ஸ் மிண்டானோ (Mindanao) பகுதியில் இன்று 7.8 மெக்னிடியூட் அளவிலான பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பிலிபைன்ஸ் மற்றும் அருகிலிருக்கும் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (08) , உள்ளூர் நேரம் காலை 7.40 மணியளவில் அளவில் பிலிபைன்ஸ் மிண்டானோ பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பிலிபைன்ஸ், இந்தோனேஷியா, ஜப்பான், பாலௌ, யாப்ப், தைவான், பாபுவா நியூ கினியா மற்றும் அமெரிக்காவின் மேல் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூசிலாந்து, மற்றும் அவுஸ்திரேலியாவிற்கும் ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அந்த நாடுகளுக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
