“புத்த சாசனத்தையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமாயின் சிங்கள பௌத்த மக்கள் என்னை தேர்வு செய்ய வேண்டும்!” என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் வண. பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். புத்த சாசனத்தையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் தான் இந்த அரசியல் பயணத்தில் இறங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
