பயாகல , மலேகொட – தொடங்கொட வீதியின் பஹல அங்கொட சந்திக்கு அருகில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடங்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்றவரும், மோட்டார் சைக்கிளில் சென்றவரும் உடனடியாக களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பயாகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார். விபத்துத் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
