கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என்றும், சுமார் 1 அங்குல நீளத்திற்கு முடியை வளர்த்துள்ளார் என்றும், மேலாடை அணியாமல் நீல நிறக் கால்சட்டை அணிந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
