ஈரான் அணு ஆயுதங்களை தாம் தயாரிக்க மாட்டோம் என அமெரிக்காவிற்கு உத்தரவாதமளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய புதிய அமைதி ஒப்பந்த வரைவு ஒன்றை அவர் மீண்டும் தெஹ்ரானுக்கு அனுப்பியுள்ளதால், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பல வாரங்களாக இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அவ்வப்போது ஏற்படும் இராணுவ மோதல்களும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதிலும், போரை அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதிலும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானை பரிசீலிப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் கடுமையான நிபந்தனைகள் அடங்கிய புதிய கட்டமைப்பு ஒன்றை சனிக்கிழமையன்று திருப்பி அனுப்பியுள்ளார் என நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
