Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மக்களை குழப்ப பார்க்கிறார்கள் – எதிர்க்கட்சிகளை சாடிய பிமல் ரத்நாயக்க!

’’Rebuilding| Sri Lanka\ Fund\’’

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

Rebuilding Sri Lanka நிதியம் என்று ஒரு நிதியம் இல்லை எனக் கூறி, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் விளக்கிய அமைச்சர், “Rebuilding Sri Lanka நிதியம்” என்பது திறைசேரியின் பிரதிச் செயலாளரின் (DST) கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பெயர் மாத்திரமே என்றும், இந்த கணக்கிற்கு கிடைக்கும் நிதிகள் அனைத்தும் அரசாங்கத்தின் திரட்டப்பட்ட நிதியத்தில் (Consolidated Fund) சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியத்தை உத்தியோகபூர்வமாக நிறுவுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான வரைவு தற்போது சட்ட வரைஞரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதைத் தடுக்கும் நோக்கிலேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மக்களை தவறாக வழிநடத்தி, குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இந்த நிதியத்திற்கு கிடைக்கும் எந்தவொரு பணமும் திறைசேரியின் பிரதிச் செயலாளரின் கணக்கிலேயே வைப்புச் செய்யப்படுவதால், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அதிலிருந்து ஒரு சதமேனும் பயன்படுத்த முடியாது என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், ‘டித்வா’ (Ditwah) பேரழிவிற்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாயில், இதுவரையில் முழுமையான தொகை பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் -சாமிமலை, மஸ்கெலியா தனியார் பேருந்துகளில் டிக்கெட் வழங்கப்படுவதில்லை!

வைகாசி 14, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் x பதிவை திரிபுப்படுத்தும் வட இந்திய ஊடகங்கள்!

வைகாசி 23, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தனிமையில் தவிக்கும் இந்தியா! 

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன பிரஜைகள் கைது!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube