ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் மனு விசாரிக்கப்படும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் கைதாகுவதை தடுக்குமாறு கோரி இந்த மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
