Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தெல்தெனியாவில் பெண் சடலம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியீடு!

ஆனி 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்

தெல்தெனிய மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இறந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் 34 வயது உடற்பயிற்சி நிபுணர் (physiotherapist) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், கந்தி கன்னோருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவரான அவரது காதலன், சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் எட்டு மாதங்களாக இருவரும் காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடக தகவல்களின்படி, கனடாவுக்கு செல்லும் நோக்கில் காதலனுடன் இணைந்து திட்டமிட்டு இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வங்கி மற்றும் பல நபர்களிடமிருந்து சுமார் ரூ. 15 மில்லியன் கடனாக பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடனாளிகள் பணம் திருப்பிச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்ததால், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 3ஆம் திகதி முதல் நுவரெலியாவில் உள்ள ஒரு லொட்ஜில் தங்கி இருந்த அவர், தனது சகோதரருக்கும் மனநல மருத்துவருக்கும் தொடர்பு கொண்டு மன உளைச்சலை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளில், ஜூன் 16 செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.50 மணிக்கு சந்தேகநபர் லொட்ஜுக்கு வந்து சுமார் 40 நிமிடங்கள் அங்கு தங்கிய பின்னர், அந்த பெண்ணை அவர் சுயநினைவுடன் இருந்தபோதே வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பின்னர் அவர் சடலத்தை காரில் வைத்து ஓட்டி சென்றதாகவும் தெரியவந்துள்ளது. அந்த வாகனம் பின்னர் தெல்தெனிய மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்ட நிலையில், முன் பயணியர் இருக்கையில் கருப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளில், அந்த கார் அம்பாறையில் வசிக்கும் சந்தேகநபரின் மற்றொரு காதலிக்கு சொந்தமானது எனவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மரணப் பரிசோதனைக்கு பின் வழங்கப்பட்ட அறிக்கையில் ‘open verdict’ வழங்கப்பட்டுள்ளதாகவும், மரணம் கொலைவா அல்லது வேறு காரணத்தினாலா என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இ-பாஸ்போர்ட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சரவை உத்தரவு!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று 200மி.மீ பலத்த மழைக்கு வாய்ப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி!

வைகாசி 22, 2026
இலங்கை

எந்த முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் – சஜித் வலியுறுத்தல்!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube