Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

பெரியநீலாவணையில் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் திறந்து வைப்பு!

ஆனி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணையில் மீள்புனரமைக்கப்பட்ட கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று (19.06.2026) மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 11 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மையம், கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கௌரவ விருந்தினராகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்.ஜே. அதிசயராஜ் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.

மேலும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பூ. கஜேந்திரன், சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தௌபிக் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது, கலாசார மையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பொறுப்பு, பெரியநீலாவணை தமிழர் கலாசார ஒன்றியத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான என். சௌவியதாசன் தலைமையிலான குழுவினரிடம் ஆளுநரால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிகழ்வை முன்னிட்டு தமிழ் மற்றும் சிங்கள கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. அத்துடன், பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்களின் இசைக்குழு வாத்திய நிகழ்ச்சியுடன் வருகை தந்த அதிதிகள் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை என்பது அனைவருக்குமான நாடு

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும 2ம் கட்டத்திற்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

ஆனி 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தலவாக்கலை, வட்டகொட புகையிரத நிலையங்களில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube