இன்று (20) முதல் வாகனங்களின் முன் ஆசனங்களில் பயணிப்பவர்கள் மாத்திரமன்றி, பின் ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.
எனவே, இன்று (20) முதல் இந்த சட்டம் கண்டிப்பான முறையில் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் ஆசனத்தில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாகும்.
அதேநேரம், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி மற்றும் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
