இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையின்போது இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்தவும் சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்தவும் விசேட காவல்துறை அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
