சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளனர்.
இதற்கமைய, அவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
