மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி தமது 61ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
இந்நிலையில்,சுகவீனமுற்றிருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ( 21) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசியல் மற்றும் சமூக துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஜெயானந்தமூர்த்தியின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
