கொட்டாஞ்சேனைப் பகுதியில் ரூ. 6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ரூ. 6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 3.944 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 215 கிராம் ஹெரோயின் மற்றும் ரூ. 6 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
