கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) காலை பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவத்தை பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
