மொனராகலை மாவட்டத்திற்கு நேற்று (24.06.2026) விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், குமாரிவத்தை தோட்டப் பகுதி மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மொனராகலை பிரதேச சபைத் தலைவர் சமிந்த குருப்பு மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஷ்ணன் பிரதீபன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
