வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 32 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெனிசுவேலாவின் தலைநகரான காரகாஸ்ஸில் நேற்று (24) புதன்கிழமை மாலை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பாதிப்புகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.
இதன் போது முதல் நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட்டாகவும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 மெக்னிடியூட்டாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே இரண்டாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
வெனிசுவேலாவின் வடக்கில் உள்ள காரகாஸ் நகரில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நில நடுக்கங்களினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 700 பேர் காயமடைந்துள்ளதாக சர்வேதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
