இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் சுமார் 190 பில்லியன் ரூபாயை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை , ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெப்ரி முகமத் என்ற இந்த சந்தேகநபர், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரான ஜெப்ரி முகமத் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகப் போலியாகக் கூறி, சுமார் 190 பில்லியன் ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
