Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

டெங்குவால் உயிரிழந்த பட்டதாரி தாய்! பிரசவத்திற்குப் பின் பிரிந்த உயிர்!

ஆனி 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பட்டதாரி பெண் ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை (25) இரவு சுமார் 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான முதல் டெங்கு மரணம் இதுவென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கணேசலிங்கம் கலாரஞ்சினி நேற்று (26) நடைபெற்ற அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

என்ன நடந்தது?

ஜூன் 17 அன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் கடுமையான காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூன் 18 அன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு விசேட மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

ஜூன் 21 அன்று மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியில் அவர் ஆரோக்கியமான பெண் குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுத்தார். குழந்தை உயிர் தப்பினாலும் தாயின் உடல்நிலை மோசமடைந்தது.

பிரசவத்திற்குப் பின்னர் அந்தத் தாய்க்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 12 அலகு இரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

மகப்பேறு சிறப்பு மருத்துவர் சி. சரவணன் உள்ளிட்ட மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் முழுமையாக முயன்ற போதிலும் டெங்கு நோயின் தீவிர தாக்கத்தால் இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழந்தன.

இறுதியில், அனைத்து மருத்துவ முயற்சிகளையும் மீறி நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

தன் தாயின் முகத்தைக் கூட அறியாத நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை இன்று உலகில் உள்ளது என்ற இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரணம் அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கையாகும்.

காய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். டெங்கு கொசு பரவலை கட்டுப்படுத்த ஒன்றிணைவோம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் கத்திக்குத்து

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டி மற்றும் கெப் ரக வாகனத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலி!

வைகாசி 31, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

சித்திரை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube