சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசாவத்தை பிரதேசத்தில் கெசல்கமுவ காப்பகத்தில் பொகவந்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 43 மற்றும் 44 வயதுடைய பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
