வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய இரட்டை நிலநடுக்கத்திற்குப் பின்னர், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளமை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள அதிசய சம்பவமாகக் கருதப்படுகிறது.
சுமார் 32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்தக் குழந்தையை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். நீண்ட நேரம் சிக்கியிருந்த போதிலும், குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுமார் 90 நிமிடங்களில், அதே இடிபாடுகளிலிருந்து குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டார்.
குழந்தை தனது தந்தையுடன் மீண்டும் இணையும் நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து அல்லது காணாமல் போயுள்ள இந்த பேரழிவின் மத்தியில், இந்த மீட்பு சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் மீட்புப் பணிகள், சர்வதேச மீட்புக் குழுக்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
