நுவரெலியா மாவட்டத்தில் கல்வி வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில், அங்கு ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பொது மக்களிடையே கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தலவாக்கலை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (26) கடமையில் இருந்த பலரும் இந்த பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவாக தமது கையொப்பங்களை பதிவு செய்துள்ளனர். சேகரிக்கப்பட்ட இந்த மகஜர், மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கல்வி உரிமை மற்றும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மலையக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
