கல்கிஸ்சை கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கடலில் நீராடச் சென்ற 5 இளைஞர்கள் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட போது கடமையில் இருந்த கல்கிஸ்சை உயிர் பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனர்த்ததுக்கு முகம் கொடுத்தவர்கள் 18 வயதுடையவர்கள் எனவும் ராஜகிரிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
