ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷானன் தோட்டப் பகுதியில் வாகனத்தில் மோதியதில் அரிய வகை மலைச் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று (29) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதை கண்ட தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, உயிரிழந்த சிறுத்தையின் உடலை மீட்டு நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அந்த சிறுத்தை இரவு வேளையில் இரையைத் தேடி வீதியைக் கடக்க முயன்றிருக்கலாம் என்றும், அப்போது வேகமாக வந்த வாகனமொன்று மோதியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் வாகன விபத்துகளாலும் சட்டவிரோத கம்பிக் கண்ணிகளாலும் அரிய வகை மலைச் சிறுத்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
