காலநிலை ஆய்வு திணைக்களத்தின் தகவலின்படி, கற்பிட்டியிலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலான கடலோரக் கடற்பரப்பின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அத்துடன், தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் கடலோரக் கடற்பரப்புகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடிய சாத்தியம் இருப்பதாக காலநிலை ஆய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
