திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர் அலிபிரி மலைப்பாதையின் 3,550 படிகளையும் நடந்தே கடந்து தரிசனம் செய்துள்ளார்.
குறித்த மூதாட்டி கைத்தடியை மட்டுமே ஊன்றுகோலாகப் பயன்படுத்தியுள்ளார். தள்ளாடும் வயதிலும் தளராத மன உறுதியுடன் சுமார் 9 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த மலைப்பாதையை அவர் நடந்தே கடந்துள்ளார்.
இந்த மூதாட்டியின் அசாத்திய மன உறுதியையும் பக்தி வைராக்கியத்தையும் கண்டு அங்கு கூடியிருந்த ஏனைய பக்தர்கள் பெரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
