சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான கட்டண விளம்பரங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கமளிக்கவும் இந்திய அரசு மெட்டா நிறுவனத்திடம் கோரியுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இணையத்தள ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் பதில் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
