நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இரு தனியார் வங்கிக் கணக்குகளை பரிசோதித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதாரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்படி, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளார்.
