வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும், அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகளை எளிதாக்க பட்டதாரிகளின் தரவுகளை சேகரிப்பதே இதன் நோக்கம் என தெரிவித்த அவர், அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் தங்களது கல்வி விவரங்களுடன் கலந்து கொள்ளுமாறும், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திறந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
