கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நவம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய இரு இந்திய தேசிய சாட்சிகளுக்கு, வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்கும் விசேட சட்ட நடைமுறையின் கீழ் நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
