திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 4,847 கிலோகிராம் சுறா மீன்களுடன் ஏழு மீனவர்களை இலங்கை கடலோர காவல் படை கைது செய்துள்ளது.
நேற்று (07) பலநாள் மீன்பிடிப் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த Alopias Vulpinus மற்றும் Carcharhinus Longimanus இனங்களைச் சேர்ந்த சுறா மீன்கள் கைப்பற்றப்பட்டதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திக்கோவிட்ட மீன்வள பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
