நிந்தவூரில் உயிரிழந்த போதைப்பொருள் வியாபாரி எனக் கூறப்படும் நபரின் சடலத்தை, போதைப்பொருள் வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குறித்த நபருக்கான ஜனாஸா தொழுகையை பள்ளிவாசலில் நடத்தாமல் அவரது வீட்டில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
