ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 சரக்கு விமானம் அரபிக்கடல் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 5 பணியாளர்கள் இருந்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானத்தின் வழிசெலுத்தல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் தகவல் கிடைத்த பின்னர், அது ராடார் மற்றும் வானொலி தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
