அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் புதன்கிழமை கடுமையாக உயர்ந்தன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.49% அதிகரித்து ஒரு பீப்பாய் 75.94 டொலராகவும், அமெரிக்க WTI எண்ணெய் விலை 2.84% உயர்ந்து 72.44 டொலராகவும் பதிவானது.
ஈரான் இலக்குகளை நோக்கி அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு பின்னர், ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதுகாப்பு குறித்து புதிய அச்சங்கள் எழுந்துள்ளன.
உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை கையாளும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டார் குற்றச்சாட்டின்படி, வளைகுடா பகுதியில் மூன்று வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டாரின் எல்.என்.ஜி கப்பல் ஒன்றும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
நீடித்த மோதல் ஏற்பட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறைந்து, போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கக்கூடும் என சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
