நீர்கொழும்பு சிறை அமைதியின்மையைத் தொடர்ந்து பூசா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்ததாவது, குறித்த கைதி திடீர் உடல்நல பாதிப்புக்கு உள்ளான நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமான கலவரத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
