யாழ்ப்பாணம் – சாவகச்சேரி அரசடி தொடருந்து கடவைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் 6 வயது மகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடருந்துடன் மோதியதில் தாய் கை மற்றும் கால் பகுதிகளில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 6 வயதான மகள் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
